விலைக்கு போவார் தம்முடன் இருப்பதை,

விண்மகன் இயேசு அறியலையா?

தலைக்கு வருகிற ஏதம் உணர்கிற,

தகுந்த அறிவும் பெறவிலையா?

மலைத்து நின்றிட்ட அவரது அடியரும்,

மாறும் சூழலைப் புரியலையா?

நிலைத்து நிற்கும் திருமறை கற்போம்; 

நேயன் முன்னுரை தெரியலையா?

(மத்தேயு 16)