கல்லை, தெய்வம் என்பார் நெஞ்சம்,

கல்லாய்ப் போகையில் அழுகிறோம்.

தொல்லை விற்று, தொல்லை வாங்கும்,

துயரம் தீர்க்கவும் எழுகிறோம்.

சொல்லை, தெய்வம் என்பார் வஞ்சம்,

துடிக்க வைக்கையில் விழுகிறோம்.

எல்லை இல்லா இறைவனின் திட்டம்;

இச்சிலுவை முன் தொழுகிறோம்!

(யோவான் 11: 45-57)

உண்மை உரைக்கிற இடங்களிலெல்லாம்

ஊரார் நம்பி ஏற்பதில்லை.

நன்மை செய்கிற மனிதரையெல்லாம்

நன்றி செலுத்திப் பார்ப்பதில்லை.

இன்மகன் இயேசு மொழிந்தது எல்லாம்,

ஏற்க மறுப்பினும் பதிலில்லை.

அன்றைய அறிஞர், இன்று நம் ஆயர்,

அறிய மறுப்பதும் புதிரில்லை!

(யோவான் 6)