விதைக்கிறவன் கதையைக் கேட்டு,

விழுந்தவற்றின் நிலையைக் கண்டு,

பதைக்காமல் மனதில் கொள்வாய்;

பயனளிக்கவே பண்படுவாய்.

கதைக்காகச் சொன்னவை தெரிந்து,

கயமைவழி, கல், முள் துறந்து,

எதைக் கொண்டு நீ விதைப்பாய்?

இறைமொழியே, தென்படுவாய் !

(மத்தேயு 13:1-52)