தாழ்மைப் பண்பைத் தவறாய் எண்ணும்,

தமிழக மக்களே வாருங்கள்.

ஏழ்மைக் கோல வடிவில் மின்னும்,

இறையின் மகனைப் பாருங்கள்.

வாழ்வில் உயர்வு காண விரும்பின், 

வரட்டும் நம்முள் தாழ்மை.

ஆழ்கடல் நோக்கித் தாழும் ஆற்றின்,

அமைதிக் கொடையே செழுமை!

(யோவான் 13:1-17)