அருஞ்செயல் புரிந்த இடங்களில் கூட,
ஆண்டவர் இயேசுவை எதிர்க்கிறார்.
பெருந்திரள் கூட்டம் அவர் புகழ் பாட,
பெருமைக்காரரோ கொதிக்கிறார்.
வருந்திடும் நாட்கள் வரும் வரை ஆட,
வானிறையும் அனு மதிக்கிறார்.
திருந்தும் நமக்கோ திருவடி நாட,
திருச்செயலாலே விதிக்கிறார்!
(யோவான் 12:37-38)