ஆண்டவர் செய்த அருஞ்செயல் யாவும்
மாண்டவர் கூட அவர் குரல் கேட்டு,
மறுபடி வாழ்ந்தது உறவுக்கே.
தோண்டிப் பார்க்கும் நம் நிலை இன்று,
தூய நினைப்பில் யாருக்கே?
வேண்டிடும் நன்மை பகிருவதாலே,
விளையும் நூறாய் ஊருக்கே!
(யோவான் 11).
The Truth Will Make You Free
தன்னிடம் வந்த எளியரைக் கண்டு,
தாங்கும் மைந்தன் உருகுகிறார்.
இன்னிலம் வாழும் உரிமை உண்டு;
இயலார் நிலைக்கு மருகுகிறார்.
எண்ணி முடியா அருஞ்செயல் கொண்டு,
எளியருக்குதவி, பெருகுகிறார்.
நன்மை செய்வதே நமக்கும் தொண்டு;
நடப்பார் மேலும் மெருகுகிறார்!
(மத்தேயு 14).