தன்னிடம் வந்த எளியரைக் கண்டு,

தாங்கும் மைந்தன் உருகுகிறார்.

இன்னிலம் வாழும் உரிமை உண்டு;

இயலார் நிலைக்கு மருகுகிறார்.

எண்ணி முடியா அருஞ்செயல் கொண்டு,

எளியருக்குதவி, பெருகுகிறார்.

நன்மை செய்வதே நமக்கும் தொண்டு;

நடப்பார் மேலும் மெருகுகிறார்!

(மத்தேயு 14).