ஈராறு அடியரும் எழுபது தொண்டரும்,

ஏழை, செல்வரில் ஏற்ற பெண்டிரும்,

ஊராகத் திரிந்து ஒட்டிக் கொண்டனர்;

ஓய்வும் இன்றி ஊழியம் கண்டனர்.

சீராகத் திருப்பணி செய்ய விரும்புவர்,

செவ்வழி காண நெஞ்சிலரும்புவர்,

நேராக இயேசுவைப் பின் தொடரும்;

நேர்மையாலே உளம் படரும்!

( லூக்கா 9 & 10)