பன்னிரு அடியரும் பார்க்க வறியவர்;
பயிற்சி பட்டம் பெறாதுமிருந்தவர்.
அந்நில மக்களில் குறைந்த அறிவர்;
ஆனால் இறைக்கு அருமையானவர்.
நன்னிலச் செலவிற்கு மீன் பிடிப்பவர்;
நம்பி வந்து தம்மைக் கொடுத்தவர்.
என்னருள் இயேசு செயலைப் பார்ப்பவர்,
இவரைச் சொல்வர், பெருமையானவர்!
(மத்தேயு 10)