எந்தப் பணியும் தொடர விரும்பின்,

இருக்க வேண்டும் அடியார்கள்.

அந்தப்படியே ஊழியம் புரிந்தால், 

ஆற்றல் பெருக, மடியார்கள்.

தந்தைப் பணிக்கு இயேசு தெரிந்த,

தன்னலம் அற்ற அடியார்கள்,

சொந்தத் தொழிலைக் கை விட்டாலும்,

துயர் அழைப்பில் மடியார்கள்!

(மத்தேயு 10)