பலவித தோற்றங்கள் கொடுப்பினும்,

பகிர்ந்திட படங்கள் எடுப்பினும்,

விலையறு புழுவாய் இருக்கிறேன்.

வீண் புகழ்ச்சியை வெறுக்கிறேன்.

இலை மறை காய் எனும் நல்லிறை

எனக்கு அருளிடும் சொல்லுரை,

மலைதனை பெயர்ப்பது, காணுவேன்;

மடியா அன்பினால் பேணுவேன்!

-கெர்சோம் செல்லையா

www.thetruthintamil.com