இந்த நாளில் பல்வகைக் கருத்தால்,

இயங்கும் பற்பலக் கூட்டம் போல்,

அந்த நாளிலும் யூத இனத்தினர்,

அவரைப் பிரித்து நடந்தனர்.

சொந்த இனத்தின் விடுதலை நாடி

சொல் செயலாலே வெறியூட்டி,

எந்த மீட்பும் எதிலும் பெறாமல்,

இயாலாமையிலே கிடந்தனர்!