சொல்லும் சொல்லில் ஆளுமை கண்டோர்,
இல்லாரிடத்திலும், இருப்பார் இல்லிலும்,
இயேசு செல்வதும் நாம் கண்டோம்.
பொல்லா நோய்களும், புரியா வலிகளும்,
புறப்பட்டோடுதல் நாம் கண்டோம்.
எல்லோர் நோக்கும் இறையை நோக்கும்,
இருப்பிடம் இயேசுயெனக் கண்டோம்!
(மத்தேயு 8:1-17).