சொல்லும் சொல்லில் ஆளுமை கண்டோர்,

சொக்கி நின்றதை நாம் கண்டோம்.

இல்லாரிடத்திலும், இருப்பார் இல்லிலும்,

இயேசு செல்வதும் நாம் கண்டோம்.

பொல்லா நோய்களும், புரியா வலிகளும்,

புறப்பட்டோடுதல் நாம் கண்டோம்.

எல்லோர் நோக்கும் இறையை நோக்கும்,

இருப்பிடம் இயேசுயெனக் கண்டோம்!

(மத்தேயு 8:1-17).