திருடாதேயெனச் சொல்வோர் இன்று,

திருடும் காட்சி காண்கிறோம்.

அருளாளர் போல் அவரும் நின்று,

அள்ளிச் செல்வதும், காண்கிறோம்.

ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டி,

ஊரை உண்பதும், காண்கிறோம்.

இறைவ னொருவரே மெய் வழி காட்டி;

இயேசுவில் கண்டு, வேண்டுவோம்!