நாற்பது நாட்கள் உண்ணாதிருந்த, நன் மகன் பசியில் வாடினார். தோற்பது காணும் எண்ணமிருந்த, துயர் தரு அலகை நாடினான். ஏற்பது என்றும் இறைவிருப்பென்ற, இயேசுவோ வாக்கால் சாடினார். பார்ப்பது போதும் என நாம் போனால், பகைவன் விழுங்கத் தேடுவான்! (மத்தேயு 4:1-11).