நாற்பது நாட்கள் உண்ணாதிருந்த,

நன் மகன் பசியில் வாடினார்.

தோற்பது காணும் எண்ணமிருந்த,

துயர் தரு அலகை நாடினான்.

ஏற்பது என்றும் இறைவிருப்பென்ற,

இயேசுவோ வாக்கால் சாடினார்.

பார்ப்பது போதும் என நாம் போனால்,

பகைவன் விழுங்கத் தேடுவான்!

(மத்தேயு 4:1-11).

May be an illustration