திருடாதேயெனச் சொல்வோர் இன்று,

திருடும் காட்சி காண்கிறோம்.

அருளாளர் போல் அவரும் நின்று,

அள்ளிச் செல்வதும், காண்கிறோம்.

ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டி,

ஊரை உண்பதும், காண்கிறோம்.

இறைவ னொருவரே மெய் வழி காட்டி;

இயேசுவில் கண்டு, வேண்டுவோம்!

வாக்கால் அலகை வென்றவர் எழுந்து,

வானக அரசைத் தொடங்கினார்.

நோக்காதிருந்த கலிலெயர் விழுந்து,

நொடியில் திருந்தி அடங்கினார்.

சேர்க்காதிருக்க விழைந்தோர் மட்டும்,

செரிக்க விடாது மடங்கினார்.

தீர்க்காதிருக்கும் தீவினை கொட்டும்;

திருந்தாவிடில் அவர் முடங்குவார்!

(மத்தேயு 4:11-17)

நாற்பது நாட்கள் உண்ணாதிருந்த,

நன் மகன் பசியில் வாடினார்.

தோற்பது காணும் எண்ணமிருந்த,

துயர் தரு அலகை நாடினான்.

ஏற்பது என்றும் இறைவிருப்பென்ற,

இயேசுவோ வாக்கால் சாடினார்.

பார்ப்பது போதும் என நாம் போனால்,

பகைவன் விழுங்கத் தேடுவான்!

(மத்தேயு 4:1-11).

May be an illustration