தன்னைக் கொடுத்து எழுந்தவர் தலையில்
தாழ்ந்து இறங்கிய புறாவின் வடிவில்,
முன்னம் படைத்த மும்மையின் ஆவியர்,
முறையாய் ஊற்றக் கால் ஊன்றினார்.
பின்னர் கேட்ட விண்ணொலி விளைவில்,
பேசும் யோவான் வாக்கியப்படியில்,
நன்னிலம் மீட்க அடிக்கப் பட்டிடும்,
நல்லாடென்று ஏசு தோன்றினார்!
(மத்தேயு 3:16-17 & யோவான் 1:15-34).
