திரள் கூட்டமாய் மனிதர் அன்று, தேவை முழுக்கு என்றது போல், அருள் ஊட்டிடும் இயேசுவும் நின்று, அப்படி முழுக வேண்டுமோ? மருள் போக்கிடும் பணிக்கென வந்து, மனுவில் ஒன்றி நின்றது போல், இருள் நீக்குவார் எவரும் இல்லை; இதை அறிய வேண்டுமே! (மத்தேயு 3:13-15)