திரள் கூட்டமாய் மனிதர் அன்று,

தேவை முழுக்கு என்றது போல்,

அருள் ஊட்டிடும் இயேசுவும் நின்று,

அப்படி முழுக வேண்டுமோ?

மருள் போக்கிடும் பணிக்கென வந்து,

மனுவில் ஒன்றி நின்றது போல்,

இருள் நீக்குவார் எவரும் இல்லை;

இதை அறிய வேண்டுமே!

(மத்தேயு 3:13-15)

May be an image of 2 people and body of water