அடி பட்டிறக்கும் மனிதரைப் பார்த்து,
அவர் செயல் முடிவு என்கிறோம்.
பிடி பட்டிராத நம் வினை சேர்த்து,
பெருமை பேசித் தின்கிறோம்.
தடி கொண்டிறைவன் தடுத்தாலன்றி,
தம் பிழை திருத்த மறுக்கிறோம்.
வெடி வைத்துடைத்துக் கொடுப்பாரின்றி,
வெளி வரா நீராய் இருக்கிறோம்!
-கெர்சோம் செல்லையா.
