விபத்து!

வான் பறக்க முயன்ற ஊர்தி,

வந்து வீழ்ந்தது அதிர்ச்சி.

தான் சிறக்க வாழ எண்ணி,

தரை முட்டிய முயற்சி.

ஏன் இழந்தோம் என்று கேட்க,

ஏற்ற பதில் இலையே.

நான் இருக்க இவர் பறக்க,

நடைபயணம் வலியே !

www.thetruthintamil.com

-கெர்சோம் செல்லையா.

May be an image of fire and text

திரண்டு வந்த பெருங் கூட்டத்தார்,

திருந்தி வாழ விரும்புகிறார்.

முரண்டு நிற்பது வேண்டாமென்று,

முழுகி யெழுந்து, திருந்துகிறார்.

இரண்டு உள்ளோர் ஒன்று கொடுத்தார்;

ஏழைக்கிரங்க முன் வந்தார்.

புரண்டு தூங்கும் புரியாதினத்தார்,

போக்குரைத்து, பின் நொந்தார்!

(லூக்கா 3:1-18)

No photo description available.