விபத்து! வான் பறக்க முயன்ற ஊர்தி, வந்து வீழ்ந்தது அதிர்ச்சி. தான் சிறக்க வாழ எண்ணி, தரை முட்டிய முயற்சி. ஏன் இழந்தோம் என்று கேட்க, ஏற்ற பதில் இலையே. நான் இருக்க இவர் பறக்க, நடைபயணம் வலியே ! www.thetruthintamil.com -கெர்சோம் செல்லையா.
திரண்டு வந்த பெருங் கூட்டத்தார், திருந்தி வாழ விரும்புகிறார். முரண்டு நிற்பது வேண்டாமென்று, முழுகி யெழுந்து, திருந்துகிறார். இரண்டு உள்ளோர் ஒன்று கொடுத்தார்; ஏழைக்கிரங்க முன் வந்தார். புரண்டு தூங்கும் புரியாதினத்தார், போக்குரைத்து, பின் நொந்தார்! (லூக்கா 3:1-18)