ஏன் இறைவன் மனுவாய்ப் பிறந்தார்? என்கிற கேள்விக்குப் பதிலென்ன? வான் விடுத்து எவர்தான் வருவார்? வையம் இறங்கிட ஏது என்ன? நான் என்கிற தீவினை பெருத்து, நானிலம் கெட்டு விழுந்ததினால், தான் பெற்ற மக்களை மீட்க, தந்தையன்பாய் மகனளித்தார்! (யோவான் 3:16)