பன்னிரு அடியர் ஆவியில் பொங்கி, பற்பல நாளில் வாக்குரைத்தார். அன்னிறை வாக்கை யூதரும் வாங்கி, அக்கரையற்றே அவ மதித்தார். பின்னொரு நாளில் மீட்பர் பிறப்பார்; பேசியபடியே எழுதி வைத்தார். சொன்னவர் மறவார் சொல்லும் துறவார்; சொற்படி நிகழக் காத்திருந்தார்!