நாட்டை நினைத்து நன்மை செய்யும்
நல்ல தலைவர் நாடுகிறோம்.
கோட்டை விட்டச் சிலரைக் கண்டும்,
குறுகி நெஞ்சம் வாடுகிறோம்.
ஏட்டை எடுத்து இறை சொல் கேட்டு,
எவரும் உண்டோ, தேடிடுவோம்.
ஆட்டை மேய்த்த தாவிது கண்டு,
அவரது புகழ் பாடிடுவோம்!
(2 சாமுவேல் 2-5:-5).

The Truth Will Make You Free