மன்னர்கள் இல்லா அன்றைய நாளில், மதிப்பில் சிலபேர் சிறந்தனர். தன்னிகர் இல்லாத் தலைவர்களாகி தகுந்த முடிவும் எடுத்தனர். என்றிருந்தாலும் இவர்களை உணர்த்த, இறை வாக்கினரும் பிறந்தனர். அன்னாள் மகனாம் சாமுயெலுக்கு, அவரில் முதலிடம் கொடுத்தனர்! (1 சாமுவேல்)