எங்கும் தீது சூழ்ந்திருந்தாலும், யாவரும் அடிமையாயில்லை. அங்கும் இங்கும் சிலரிருப்பார்; அவரும் கெடுப்பவராயில்லை. தங்கள் நிலையை அவருணர்வார்; தம்மைத் தாழ்த்தி வேண்டுவார். இங்கே இறையும் இறங்கி வருவார்; இனிதாய் வாழத் தூண்டுவார்! (தொடக்க நூல் 4:25-26)