தீதை அடக்கும் வழிமுறை உண்டோ? தெய்வத்திடம் நாம் கேட்போமே. பாதை தெரியார் காண்பது என்றோ? பார்த்து அவரையும் மீட்போமே. நீதி நன்மையே உயர்வு கொடுக்கும்; நாமும் செய்து வாழ்வோமே. வாதை என்று வாயிலில் கிடக்கும், வலிய தீதை ஆள்வோமே! (தொடக்க நூல் 4:7)