உறுப்பை உறுப்பு வெறுப்பது நன்றோ?

உறுப்பை உறுப்பு வெறுப்பது நன்றோ?

வெறுப்பு என்னும் விதை விதைத்தால்,
விருப்பு என்னும் மரம் வருமோ?
பொறுப்பு இன்றி நாமும் வளர்த்தால்,
பூவும் கனியும் நலம் தருமோ?
மறுப்பு கூறுவர் இல்லை என்றாலும்,
மலிவாய்க் கிடைப்பது வெறுப்பன்றோ?
உறுப்பை உறுப்பு வெறுப்பது நன்றோ?
உள்ளம் கழுவுதல் பொறுப்பன்றோ?

-கெர்சோம் செல்லையா.

Image may contain: 5 people, people smiling

கண்ணீரில் கழுவிக் குளிக்கின்றோம்!

கண்ணீரில் கழுவிக் குளிக்கின்றோம்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 6:21.
21 இப்பொழுது பசியாயிருக்கிற நீங்கள் பாக்கியவான்கள்; திருப்தியடைவீர்கள். இப்பொழுது அழுகிற நீங்கள் பாக்கியவான்கள்; இனி நகைப்பீர்கள்.

கிறித்துவில் வாழ்வு:
ஒண்ணோ இரண்டோ மூணோ என்றால்,
ஒருவழியாக முடக்கிடுவோம்.
எண்ண முடியா இன்னல்கள் வந்தால்,
எப்படி நாங்கள் அடக்கிடுவோம்?
கண்ணீரில்தான் கழுவியும் குளித்தும்,
காலம் முழுதும் கிடக்கின்றோம்.
விண்ணின் அரசே, விரைந்து வாரும்.
விடியலைத் தேடி நடக்கின்றோம்!
ஆமென்.

No automatic alt text available.
LikeShow More Reactions