
அருட்பொழிவு எதற்காக?

The Truth Will Make You Free

நன்கு கேட்பாய் இறைச்செய்தி!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 4:16-20.
16 தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு அவர் வந்து, தம்முடைய வழக்கத்தின்படியே ஓய்வுநாளில் ஜெபஆலயத்திலே பிரவேசித்து, வாசிக்க எழுந்து நின்றார்.
17 அப்பொழுது ஏசாயா தீர்க்கதரிசியின் புஸ்தகம் அவரிடத்தில் கொடுக்கப்பட்டது. அவர் புஸ்தகத்தை விரித்தபோது:
18 கர்த்தருடைய ஆவியானவர் என்மேலிருக்கிறார்; தரித்திரருக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி என்னை அபிஷேகம்பண்ணினார்; இருதயம் நருங்குண்டவர்களைக் குணமாக்கவும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், குருடருக்குப் பார்வையையும் பிரசித்தப்படுத்தவும், நொறுங்குண்டவர்களை விடுதலையாக்கவும்,
19 கர்த்தருடைய அநுக்கிரக வருஷத்தைப் பிரசித்தப்படுத்தவும், என்னை அனுப்பினார், என்று எழுதியிருக்கிற இடத்தை அவர் கண்டு,
20 வாசித்து, புஸ்தகத்தைச் சுருட்டி, பணிவிடைக்காரனிடத்தில் கொடுத்து, உட்கார்ந்தார். ஜெபஆலயத்திலுள்ள எல்லாருடைய கண்களும் அவர்மேல் நோக்கமாயிருந்தது.
கிறித்துவில் வாழ்வு:
இன்று வராதா நற்செய்தி?
என்று எங்கும் ஏழையரும்,
கன்று போன்று துள்ளுகிறார்;
கடவுளின் அருளை அள்ளுகிறார்.
நின்று கேட்கும் என் நண்பா,
நீயும் ஆவியில் நிறைவதற்கு,
நன்கு கேட்பாய் இறைச்செய்தி;
நமக்கு அதுதான் நற்செய்தி!
ஆமென்.
