வந்த வீரரைத் தடுக்க எண்ணி,

வாளை எடுத்தான் ஒருவன்.

அந்த தவற்றையும் முடிவு பண்ணி, 

அதிசயமாக்கினார் இறைவன்.

எந்த வாளால் எவர் வாழ்ந்தாலும்,

அவரையும் அவ்வாள் வீழ்த்தும். 

இந்த அறத்தால் நிலை தாழ்ந்தாலும்,

இறையே நம்மை வாழ்த்தும்!

(மத்தேயு 26:51-56; லூக்கா 22:49-53 & யோவான் 18:1-11).