வேண்டலின் மாதிரி கற்றுத் தந்து,
விளிக்கும் கிறித்து உரைத்தபடி,
ஆண்டிட நம்மை இறையிடம் ஈந்து,
அவர் விருப்பு செய்வோமா?
மாண்டிடும் மக்கள் பெருந்திரள் கண்டு,
மடியு முன் உறவை மீட்பதற்கு,
நீண்ட நெடும்பணி நமக்கு உண்டு;
நிறைவுற அன்பு பெய்வோமா?
(மத்தேயு 26:36-44).