ஏங்கும் இறைமகன் வேண்டல் காண,

யோவான் பதினேழு பாருங்கள்.

தூங்கா இரவில் தொடங்கும் அவரது, 

தூய மன்றாட்டைக் கேளுங்கள்.

நீங்காதிருக்கும் நிற, இனப் பிரிவுகள்

நேர்மையுள் இணைய வாருங்கள்.

வாங்கிய வாக்கை விற்றது போதும்;

வரட்டும் ஒற்றுமை, வாழுங்கள்!

(யோவான் 17: 20-26).