ஏங்கும் இறைமகன் வேண்டல் காண,
யோவான் பதினேழு பாருங்கள்.
தூங்கா இரவில் தொடங்கும் அவரது,
தூய மன்றாட்டைக் கேளுங்கள்.
நீங்காதிருக்கும் நிற, இனப் பிரிவுகள்
நேர்மையுள் இணைய வாருங்கள்.
வாங்கிய வாக்கை விற்றது போதும்;
வரட்டும் ஒற்றுமை, வாழுங்கள்!
(யோவான் 17: 20-26).