தந்தையும் மைந்தனும் ஒன்றாய் இருந்து,

தரணியை ஆள்வது கண்டிட்டும்,

மைந்தர் என்கிற பேறுடை கிறித்தவர், 

மண்ணில் ஒன்றாய் இருக்கலையே.

நிந்தையும் பழியும் நித்தமும் சொரிந்து,

நெறியற்ற அலகை தண்டித்தும், 

மந்தையின் மேய்ப்பர், மறைப்பணி தலைவர்,

மனதை இணைத்துப் பெருக்கலையே!

(யோவான் 17)