ஏரோது அரசன் கட்டிய கோயில்,

எடுத்துக் காட்டிய அழகு கண்டு,

ஈராறு அடியரும் வாய் பிளந்தார்;

இப்படி மனிதர் இன்றுமுண்டு. 

தேறாது போகும் எருசலேம் கோயில்;

தெரிந்துரைத்த இயேசு கண்டு,

வாராதிருப்பார் வாழ்விழப்பார்;

வாக்கை நம்பு, மீட்பு உண்டு!

(மத்தேயு 24:1-2)