எருசலேம் நகரில் இயேசு வருகையில்,

எளியர் ஏழையர் வரவேற்றார்.

பெருந்திரள் சிறுவர் பெரியோர் அவரில்,

புகழும் வாழ்த்தொலி இறை கேட்டார்.

அருவருப்பென்கிற கழுதை மேலமர்ந்து,

அமைதியினாண்டவர் வலம் வந்தார்.

இறையரசமைக்கச் சண்டையிடாதீர்;

இயேசு தாழ்மையில் நலம் தந்தார்!

(லூக்கா 19:28-38)