கொல்வார் என்று தெரிந்தே இயேசு,
கொல்கதா நகருக்கு விரைகிறார்.
வல்லிறை வகுத்த திட்டம் முடித்து,
வாழ்வு கொடுத்திட வருகிறார்.
செல்கிற ஊர்களில் அருஞ்செயல் செய்து,
சேர்ப்பின் செய்தி தருகிறார்.
இல்லார் பெற்றார், இயேசுவில் உற்றார்;
இங்குளோர் ஏற்பின் பெறுகிறார்!
(யோவான் 11:1-10)