உண்மை உரைக்கிற இடங்களிலெல்லாம்

ஊரார் நம்பி ஏற்பதில்லை.

நன்மை செய்கிற மனிதரையெல்லாம்

நன்றி செலுத்திப் பார்ப்பதில்லை.

இன்மகன் இயேசு மொழிந்தது எல்லாம்,

ஏற்க மறுப்பினும் பதிலில்லை.

அன்றைய அறிஞர், இன்று நம் ஆயர்,

அறிய மறுப்பதும் புதிரில்லை!

(யோவான் 6)