தன் மகன் திருந்தி வந்தது கண்டு, 

தந்தை விருந்து அளிக்கிறார்.

நன் மகன் அண்ணனோ சினம் மூண்டு,

நடுவில் வராது பழிக்கிறார்.

அன்பினின் உருவாம் அப்பா அறிந்து, 

அவனை வருந்தி விளிக்கிறார்.

என் மகன் இறந்தான், எழுந்து வந்தான்;

இன்புறவேயென அழைக்கிறார்!

(லூக்கா 15:11-32)