திரும்பி வருவான் தன்  மகனென்று,

தேடும் தந்தை காத்திருந்தார்.

இருந்த வீட்டில் நிலை கொள்ளாது,

ஏங்கி எங்கும் பார்த்திருந்தார்.

வருந்தி வருகிற மகனை அணைக்க,

வயது முதிர்விலும் ஓடுகிறார்.

தெரிந்து கொள்வீர் இறையின் அன்பை;

தெய்வம் நம்மைத் தேடுகிறார்!

(லூக்கா 15:11-32).