இரு மைந்தரும் ஒரு தந்தையும் 

இணைந்து வாழ்கையில் இன்பம்.

சிறு மைந்தனோ சொத்தைப் பிரித்து,

சென்று விட்டதால் துன்பம்.

குறு மதியால் அனைத்தையும் இழக்க,

குடல் சுருங்கினான் இளையான்.

வறுமையில்தான் அறிவு பிறக்கும்;

வருத்தும் தீமை களைவான்!

(லூக்கா 15;11-32)