நல்ல நிலத்தில் நல்விதை விதைத்தும்,

நயவஞ்சகனோ களை விதைப்பான்.

எல்லாம் வளர்கிற காட்சி கண்டால்,

எவன் களையை விட்டு வைப்பான்?

வல்ல இறையோ வளர வைக்கிறார்;

வளமும் நீரும் வாய்க்கச் செய்கிறார்.

நெல்லை அறுவடை செய்யும் நாளில், 

நீசரை முதலில் அறுத்தெரிக்கிறார்!

(மத்தேயு 13:24-30)