நல்ல நிலத்தில் நல்விதை விதைத்தும்,
நயவஞ்சகனோ களை விதைப்பான்.
எல்லாம் வளர்கிற காட்சி கண்டால்,
எவன் களையை விட்டு வைப்பான்?
வல்ல இறையோ வளர வைக்கிறார்;
வளமும் நீரும் வாய்க்கச் செய்கிறார்.
நெல்லை அறுவடை செய்யும் நாளில்,
நீசரை முதலில் அறுத்தெரிக்கிறார்!
(மத்தேயு 13:24-30)