இரக்கம் என்பது இறையின் பண்பு;
இயேசு மொழிந்தார் யூதர் முன்பு.
சிறக்கச் செய்வது செல்வம் என்று,
சிந்தித்தாரைத் திருத்த அன்று.
உரக்கப் பேசிச் செய்யார் கண்டு,
ஊரில் பற்பல கதைகள் உண்டு.
மறக்க மாட்டா இயேசுவோ வந்து,
மன்னிக்கிறார் தம்மைத் தந்து!
(லூக்கா 6)