இரக்கம் என்பது இறையின் பண்பு;

இயேசு மொழிந்தார் யூதர் முன்பு.

சிறக்கச் செய்வது செல்வம் என்று, 

சிந்தித்தாரைத் திருத்த அன்று.

உரக்கப் பேசிச் செய்யார் கண்டு,

ஊரில் பற்பல கதைகள் உண்டு. 

மறக்க மாட்டா இயேசுவோ வந்து,

மன்னிக்கிறார் தம்மைத் தந்து!

(லூக்கா 6)