நன்மை செய்து நடந்த இயேசு,

நவின்ற செய்தி அன்பாகும்.

பன்மை இனமும் சேர்ந்து வாழ, 

பயிற்றுவிக்கும் பண்பாகும்.

வன்மை செய்து காட்டும் மாசு,

வழங்கும் முடிவு துன்பாகும். 

தன்மை என்ன? விதைப்பதுதான்

தரும் விளைச்சல், பின்பாகும்!

(யோவான் 13)