தன்னிடம் வந்த எளியரைக் கண்டு,
தாங்கும் மைந்தன் உருகுகிறார்.
இன்னிலம் வாழும் உரிமை உண்டு;
இயலார் நிலைக்கு மருகுகிறார்.
எண்ணி முடியா அருஞ்செயல் கொண்டு,
எளியருக்குதவி, பெருகுகிறார்.
நன்மை செய்வதே நமக்கும் தொண்டு;
நடப்பார் மேலும் மெருகுகிறார்!
(மத்தேயு 14).