ஈராறு அடியரும் எழுபது தொண்டரும்,
ஏழை, செல்வரில் ஏற்ற பெண்டிரும்,
ஊராகத் திரிந்து ஒட்டிக் கொண்டனர்;
ஓய்வும் இன்றி ஊழியம் கண்டனர்.
சீராகத் திருப்பணி செய்ய விரும்புவர்,
செவ்வழி காண நெஞ்சிலரும்புவர்,
நேராக இயேசுவைப் பின் தொடரும்;
நேர்மையாலே உளம் படரும்!
( லூக்கா 9 & 10)