திருமறை சொல்லா இன்னொரு பிரிவு,

தேடிப் பார்க்க வரலாறுரைக்கும்.

பெருமைகள் துறந்து நோன்புமிருந்து,

பெயரில்  எசேனி என்றுமிருக்கும்.

மறுமுறை உயிர்ப்பு நம்பாப் பிரிவு,

மறைந்து ஒடுங்கி தனை மறக்கும்.

ஒருமுறை இறக்க, இருமுறை பிறப்பு;

இறைமகன் சொல்லே சிறக்கும்!