திரண்டு வந்த பெருங் கூட்டத்தார்,

திருந்தி வாழ விரும்புகிறார்.

முரண்டு நிற்பது வேண்டாமென்று,

முழுகி யெழுந்து, திருந்துகிறார்.

இரண்டு உள்ளோர் ஒன்று கொடுத்தார்;

ஏழைக்கிரங்க முன் வந்தார்.

புரண்டு தூங்கும் புரியாதினத்தார்,

போக்குரைத்து, பின் நொந்தார்!

(லூக்கா 3:1-18)

No photo description available.