அறிஞர் திரும்பி வராதது கண்டு,
அரசன் வெறியில் துடிக்கிறான்.
சிறுவர் பலரில் ஐயம் கொண்டு,
சினத்தில் கொன்று முடிக்கிறான்.
வறிஞர் என்பார் அறிவிலும் உண்டு;
வாழ நினைப்போன் படிக்கிறான்.
புரிவாய் நண்பா, புனிதத் தொண்டு;
புரியா ஏரொது வெடிக்கிறான்!
(மத்தேயு 2).