வந்தவர் எத்தனை பேரென அறியோம்;
வணங்கி, பொற்பொருள் தருகிறார்.
தந்தவர் அரண்மனை செல்லாவண்ணம்,
தடுக்கப்பட்டு, விடை பெறுகிறார்.
முந்தையர் கொடுத்த பரிசுகள் போன்று,
முழுமையாக நமைத் தருவோம்.
இந்தப் படைப்பின் விளைச்சல் பெருகும்;
இனிய புதுவழிப் பேறுறுவோம்!
(மத்தேயு 2)
