பிறந்த செய்தி முதலில் கேட்டார்,

பிறரால் ஒடுக்கப் பட்டவரே.

திறந்த வெளியில் மந்தை காக்கும்,

தீட்டுத் தொழிலால் கெட்டவரே!

உறைந்த மடமை உள்ளில் கொண்டார்,

உண்மையின்றித் தீட்டென்பார்.

நிறைந்த அறிவால் நமை நடத்தும்,

நேரிறையோ நற் கூட்டென்பார்!

(லூக்கா 2: 8-12).

May be an image of lamb, sheep and text