வருவார் என்கிற வாக்கின்படியே, வையத்தாரிறை காத்திருந்தார். தருவார் அவரும் தகுந்த அரசே; தாமதமாயினும் பார்த்திருந்தார். இருயிரு நூறு ஆண்டுகளாகியும், ஏனோ இறைவன் பேசவில்லை. ஒருவரும் அறியா அந்த மௌனம், உடைக்குமறிவும் வீசவில்லை!