ஒரு பக்கம் பார்த்து நடக்கிற நமக்கும்,

ஊரின் முழுமை தெரியாது.

மறு பக்கச் செய்தியைக் கேட்கும்போதும்,

மதி மயங்கினால் புரியாது.

வருவதும் வந்ததும் அறிந்த இறைதான்,

வாழ்வின் பொருள் உணர்த்தட்டும்.

பொருளை அறிய, உவமையைக் கற்போம்;

புனிதம் நம்மைப் புணர்த்தட்டும்!

(மத்தேயு 13:1-52)